28 April 2016

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு  திருமுறை


எண்ணுடை யிருக்கு மாகி யிருக்கினுட் பொருளு மாகிப்
பண்ணொடு பாட றன்னைப் பரவுவார் பாங்க ராகிக்
கண்ணொரு நெற்றி யாகிக் கருதுவார் கருத லாகாப்
பெண்ணொரு பாக மாகிப் பேணுமாப் பாடி யாரே.

                                 - திருநாவுக்கரசர் (4-48-3)


பொருள்: மிக மேம்பட்டதாக எண்ணப்படும் இருக்கு வேதமாய் , அவ்வேதம் குறிப்பிடும் பரம்பொருளாய் , பண்ணோடு பாடல் பாடுபவர் துணைவராய் , நெற்றிக்கண்ணராய் , உண்மை ஞானிகள் அல்லாதாருக்கு அறிதலும் எண்ணுதலும் இயலாத பார்வதி பாகராய்த் திருவாப்பாடியை விரும்பி உறையும் சிவபெருமான் அமைந்துள்ளார் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...