02 February 2016

தினம் ஒரு திருமுறை


 தினம்  ஒரு திருமுறை


சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டுங்
கோதிலா ஏறாம் கொடி. 

                       - மாணிக்கவாசகர் (8-19-10)


பொருள்: சோலையில் வாழ்கின்ற பச்சைக் கிளியே! தூய்மையான நீர் சூழ்ந்த திருப்பெருந்துறை மன்னனது கொடியாவது, பகைவர் மிகவும் திடுக்கிட்டு அஞ்சும்படி மேலே விளங்கி, அழகைக் காட்டுகின்ற குற்றமில்லாத இடபமேயாகும். அழகு விளங்கும் அக்கொடியினைக் கூறுவாயாக



No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...