23 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி தாங்குதலால் - ஆம்பொன்
உருவடியில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு.

               - காரைகாலம்மையார் (11-4-67)

பொருள்:  சிவபெருமான் பகைப் பொருள்களைத் (பாம்பு, மதி, மான், புலி )தனது மேனியில் பகைதீர்த்துப் பயில வைத்தமையாலும், தாங்கற்கரிய கங்கையைத் தலையில் தாங்கினமையாலும் - சிவன் திருவடியில் மேயது கழலேயாகையால் `கழல் வீரம் உடையார்க்கே உரியது என்பது இங்கு நன்று பொருந்தியுள்ளது. 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...