06 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முத்து வயிரமணி மாணிக்க
மாலைகண்மேற்
றொத்து மிளிர்வனபோற் றூண்டு
விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள் ஏத்தும்
எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே யாடரங்க
மாயிற்றே.
 
              - பூந்துருத்திகாடநம்பி (9-19-1)

 

பொருள்: முத்து, வயிரம், மாணிக்கம் என்ற மணிகளால் செய்யப்பட்ட மாலையின் ஒளிவீசுவது போன்றும், விளக்கின் ஒளி போன்றும், எல்லாத் திசைகளிலும் உள்ள தேவர்கள் போற்றிப்புகழும் தில்லைத் தலத்தில் உள்ள, ஒளிவீசும் பொன்னம்பலம் எம்பெருமானுக்கும் திருக்கூத்து நிகழ்த்தும் அரங்கமாக ஆயிற்று.

03 April 2015

மயிலை பங்குனி உற்சவம் 2015 - 3

மயிலை பங்குனி உற்சவம் 2015 - 3

அறுபத்து மூவர்  உற்சவம் 





 

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.
 
                   - மாணிக்கவாசகர் (8-14-1)

 

பொருள்: சிவபெருமானது  வில் வளைந்தது; போர் மூண்டது; மூளுதலும் முப்புரங்களும் ஒருமிக்க வெந்து நீறாயின. அந்தத் திரிபுரத்தை அழித்த நற் செய்தியை நினைத்தால் வியக்கத்தக்க தாக இருக்கிறது என்று உந்தீபறப்பாயாக
 

02 April 2015

மயிலை பங்குனி உற்சவம் 2015 - 2

மயிலை பங்குனி உற்சவம் 2015 - 2

வெள்விடை கபாலி காட்சி 

கபாலி 
 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வளங்கனி பொழின்மல்கு
வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர்
வெள்ளடை யுறைவானை
இளங்கிளை யாரூரன்
வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை
பத்தர்கட் குரையாமே.
 
                 - சுந்தரர் (7-29-10)

 

பொருள்: வளம்  மிகுந்த சோலையும்  , நிறைந்த வயல்களையும் சூழக் கொண்டு அழகிதாய் நிற்கின்ற , வீசுகின்ற ஒளியினையுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற இறைவனை , சிங்கடிக்குத் தங்கையாகிய , ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையாம் நம்பியாரூரன் , மனம் இன்புற்றுப் பாடிய இத் தமிழ்மாலை , அவன் அடியார்கட்கு அவனைத் துதித்தற்கு உதவும் புகழ்மாலையாய் நிற்கும் .
 

01 April 2015

மயிலை பங்குனி உற்சவம் 2015

 மயிலை பங்குனி உற்சவம் 2015

பிள்ளையார் 

அதிகார நந்தி - கபாலீஸ்வரர் 

கற்பகவல்லி அம்மையார் - கந்தர்வி வாகனம்  

முருகன் வள்ளி தெய்வானை -கந்தர்வ வாகனம் 

சண்டிகேஸ்வரர் வெள்விடை வாகனம் 

அங்கன்பூம்பவை திருஞானசம்பந்தர் 
 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மலக்கில்நின் னடியார்கள்
மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய
தருமனார் தமரென்னைக்
கலக்குவான் வந்தாலுங்
கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.
 
              - சுந்தரர் (7-29-8)

 

பொருள்: அடியார்களது மனத்தில் உள்ள மயக்கத்தினைப் தீர்பவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , துன்பத்தைத் தருகின்ற வெகுளியையும் , மிடுக்கினையும் உடைய இயமன் தூதுவர் என்னை அச்சுறுத்த வந்தாலும் , அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமலே விலக்குவோன் நீயேயன்றோ !